Showing posts with label health. Show all posts
Showing posts with label health. Show all posts

Saturday, 19 September 2015

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்!!!

By     No comments:


வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆனால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை கரைக்க முடியும். இதனால், உங்கள் உடல் எடை குறைவது மட்டுமின்றி, குடலியக்கம் சீராகும், செரிமானம் சரியாகும்....

பப்பாளி பழம் கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

தக்காளி கொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

காளான் குடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.

ஓட்ஸ் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம் வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.

திராட்சை திராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். தொடர்ந்து நீங்கள் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 10 நாட்களில் 10 பவுண்ட் எடை வரை குறைக்க முடியுமாம்.

கர்ப்பிணி பெண்கள் காதில் விழக் கூடாத வார்த்தைகள்!!!

By     No comments:

ருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கலாம்...

கேள்வி 1 பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பிணி முன்பு பேசவே கூடாது. இது அவர்களை மனதளவில் பெரிதாய் பாதிக்கும்.

கேள்வி 2 ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதிரி வயிறு வெளியே தெரியும். அதற்காக வயிறு மிகவும் சிறியதாய் இருப்பது போல தெரிகிறது, மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு. என்பது போல பேச வேண்டாம். மாதா மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை கூறிக் கொள்வர். நீங்கள பயமுறுத்த வேண்டாம்.

கேள்வி 3 முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் என்பது போல எப்போதும் கர்ப்பிணி முன்பு பேச வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் போது அதன் குணாதிசயங்கள் மாறுபட வாய்ப்பிருக்கிறது.

கேள்வி 4 வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என நீங்களாக எதையும் கொளுத்தி போட வேண்டாம். இதுப் போன்ற ஆசைகள் அதிகரித்து, பிறகு வேறு குழந்தை பிறக்கும் போது மனதளவில் பெண் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கேள்வி 5 சாப்பாடு விஷயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கா, பரவலா கொஞ்ச நாள் தான் என கூறி, அவர்களது ஏக்கத்தை அதிகரிக்க வேண்டாம். இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கவல்லது.

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!!!

By     No comments:

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!! ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் போல்ட்ஸ்கை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பு சேரும் இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும். அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம். பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும். மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.

இதய துடிப்பு இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.

செல்கள் வேறுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும். இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்த சிவப்பணுக்கள் ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றனர்.

நுரையீரல் ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.

தலை, தண்டுவடம், கால்கள் அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.

வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.

பற்கள் பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும். சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.

ஆக்ஸிஜன் அளவு ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும். இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான். சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிரை இழக்கக்கூடும்?

By     No comments:

அன்றாடம் இரவில் படுக்கும் முன் பலரும் சாப்பிடும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அத்தகைய வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் பொட்டாசியம் தான் அதிக அளவில் வாழைப்பழத்தில் உள்ளது. இச்சத்து இதயம், ரத்தம், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். 12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்! ஆனால் ஒரு நாளில் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே பலரும் வாழைப்பழத்தை சாப்பிட பயன்படுகின்றனர். அதிலும் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழத்தை உட்கொள்ளலாம், 7 ஆவது பழத்தை உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்று நம்புகின்றனர். ஆனால் இது குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

400 வாழைப்பழம் உயிரைக் குடிக்கும் அளவில் எனில் சுமார் 400 வாழைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும், அதில் உள்ள முழு பொட்டாசியமும் நேரடியாக சிறுநீரகங்களைத் தாக்கினால் மட்டுமே உயிரிழக்கக்கூடும்.

குடல் தடுக்கும் ஆனால், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, பாதி வழியிலேயே பாதி பொட்டாசியத்தை குடல் உறிஞ்சிவிடும். எஞ்சிய பொட்டாசியம் தான் சிறுநீரகங்களுக்குச் செல்லும். எனவே 400 பழங்களை ஒரே நேரத்தில் உட்கொண்டாலும் மரணம் ஏற்படப் போவதில்லை என்று லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த காத்தரின் கொலின்ஸ் என்னும் உணவுமுறை நிபுணர் கூறியுள்ளார்.

கதிரியக்க விஷம் வாழைப்பழத்தைக் குறித்து மற்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது. அது என்னவெனில், வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுகிறது என்பது தான்.

கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது... ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவதோடு, வாழைப்பழத்தினால் கதிரியக்க விஷம் பரவுவதற்கு ஒருவர் ஒரு வேளைக்கு 10 லட்சம் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் அதுமட்டுமின்றி, கேத்தரின் ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் வீதம் தொடர்ந்து ஏழு வருடங்கள் உட்கொண்டு வந்தால் தான், உடலில் கதிரியக்க விஷம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளே தென்படும் என்கிறார். எனவே, எவ்வித பயமும் இல்லாமல் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? கூடாதா?

By     No comments:

பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பிரியர்கள், அதனை எப்படி சமைத்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். இத்தகையவர்கள் வீட்டில் எப்போதுமே உருளைக்கிழங்கு இருக்கும். ஆனால் அப்படி மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைக்கட்டினால், அதை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று தெரியாது. 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க! இது குறித்து அகமதாபாத்தை சேர்ந்த உணவுமுறை மற்றும் ஊட்டச்ச்சத்து நிபுணர் டாக்டர், ஸ்வாதி விளக்கம் அளித்துள்ளார். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சர்க்கரை அளவு உயர்வு முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான்.

பச்சை உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோல் பச்சையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அந்த அல்கலாய்டுகள் இருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்கிய உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோல் இருந்தால், அப்பகுதியை நீக்கிவிடுங்கள்.
ஆய்வு முடிவு பொதுவாக முளைக்கட்டியது ஆரோக்கியமானது என்ற கருத்து இருப்பதால், இதுக்குறித்து ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் நன்கு பிரஷ்ஷாக இருந்தால், அதில் உள்ள முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் வலிமையுடன் இருக்கும் உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்ள் அப்படியே இருக்குமாம். ஆனால் அதுவே சுருங்கிவிட்டால், அதன் முழுச்சத்துக்கள் நீக்கிவிடுவதால், அதனை தூக்கி எறிந்துவிட வேண்டுமாம்.

உருளைக்கிழங்கு முளைக்கட்டாமல் இருக்க சில டிப்ஸ்... * உருளைக்கிழங்கில் 78% நீர்ச்சத்து இருந்நதால், இது 5-7 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதனை குளிர்ச்சியான, கருமையான மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். * உருளைக்கிழங்கை ஈரப்பதமிக்க இடத்தில் வைத்து பராமரித்தால், முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப் போகவும் கூடும்.

குறிப்பு ஏன் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி முளைக்கட்டும் வரை வீட்டில் வைக்கிறீர்கள்? அதை கொஞ்சமாக வாங்கி, அவ்வப்போதே சமைத்து சாப்பிட்டால், எதற்கு இப்பிரச்சனையெல்லாம் வரப்போகிறது. எனவே பிரஷ்ஷாக வாங்கி, சமைத்து சாப்பிட்டு, அதன் முழுப்பலனையும் பெறுங்கள்.

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By     No comments:

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் ஒன்று தான் இரும்புச்சத்து. இந்த இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். இரத்த வகைகளும்... அதற்கான சரியான டயட்டும்... சரி, இரும்புச்சத்து ஏன் இன்றியமையாதது என்று தெரியுமா? பொதுவாக இது ஹீமோகுளோபினின் முக்கியமான பகுதி.
அதுமட்டுமின்றி, இதுதான் நுரையீரல் மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், உடல் செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்படும். இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!! சரி, இப்போது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
மூச்சுவிடுவதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.

அதிகப்படியான இரத்தப்போக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.

வெளிரிய சருமம் கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.
ஐஸ், சாக்பீஸ், களிமண் போன்றவை சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.
தலைவலி நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.

பதற்றம் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.

முடி உதிர்தல் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால், உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஹைப்போ தைராய்டு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்

By     No comments:

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்... ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமின்றி, பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாதி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய சோற்றினை மறந்துவிட்டோம். காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...? இங்கு அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தவைகளையும், பழைய சோற்றினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானம் மேம்படும் பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின்கள் அதிகம் பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமை தடுக்கப்படும் தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
எலும்புகள் வலிமையடையும் முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு தணியும் நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள். ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன் இருக்குமாம்.

மலச்சிக்கல் பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தம் தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்
அல்சர் இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
சம்பா அரிசி/கைக்குத்தல் அரிசி பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

குறிப்பு நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறினால் அதை மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு கூறினால் உடனே ஒப்புக் கொள்வோம். இப்போது நம் பழைய சோற்றை அவர்கள் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். இப்போதாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய சோற்றினை தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள்.

Thursday, 17 September 2015

முதலுதவி செய்யும் போது நாம் செய்யும் இந்த தவறுகள் அபாயகரமாக மாறலாம்!!!

By     No comments:

முதலுதவி, அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது. அவசர நிலைகளில் ஓர் நாள் உங்களுக்கே கூட இது உதவும். ஆனால், இதை சரியாக தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தவறான முதலுதவி முறைகள், ஆபத்தான விளைவுகளை தரக்கூடியது.

பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? - அதிர்ச்சி!!! பொதுவாக நாம் செய்யும் சில அவசர முதலுதவிகளில் தவறான முறைகளை கையாள்கிறோம். அதில் நாம் செய்யும் தவறுகள் என்ன அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை குறித்து இனிக் காணலாம்...

உராய்வுகள், வெட்டு காயங்கள் உங்கள் விரல் அல்லது கை, கால்களில் உராய்வுகள் அல்லது காய்கறி வெட்டும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், உடனே அவ்விடத்தில் ஐஸ் வைக்க வேண்டாம்.

முதலில் ஈரமான துணியை வைத்து அவ்விடத்தை கட்டவும். துணி நன்கு ஈரமாக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நன்கு துடைத்த பிறகு, அந்த இடம் வீன்காமல் இருக்க ஐஸ் பேக் பயன்படுத்துங்கள். இம்முறை பாக்டீரியாக்கள் தோற்று ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

பல் உடைந்தால் அடிபட்டு பல் உடைந்துவிட்டால் உடனே அந்த இடத்தை அழுத்தம் தர வேண்டாம். இரத்தம் வரமால் அல்லது வலிக்காமல் இருக்க பதமாக கைகளை வைத்து இலகுவாக அழுத்தம் தரலாம். முக்கயமாக உடைந்த பல்லை பாலில் போட்டு வைக்கவும். இதனால் உடைந்த அந்த பல்லை மீண்டும் அதே இடத்தில ஒட்டவைக்க முடியும்.

தீக்காயங்கள் தீக்காயம் ஏற்பட்டவுடன், காயம் ஏற்பட்ட இடத்தில பால் அல்லது வெண்ணெய்யை சில எரிச்சல் இல்லாமல் இருக்க பயன்படுத்துவார்கள். இது தவறான அணுகுமுறையாகும். அதே போல, தீக்காயம் ஏற்பட்டால் ஃபைபர் துணிகள் வைத்து போத்த வேண்டாம், இது தோலோடு ஒட்டிக்கொள்ளும். சிறு, சிறு தீக் காயங்கள் என்றால், கழுவிய பிறகு அன்டி-பயாடிக் பயன்டுத்தி மருத்துவமனைக்கு கூட்டி செல்லுங்கள்.

எலக்ட்ரிக் தீக்காயங்கள் எலக்ட்ரிக் தீக்காயங்கள் வெளியில் காண்பிக்கும் காயங்களை விட உள்ளே பெரிய பாதிப்புகள் ஏற்படுத்த கூடியது ஆகும். எனவே, நீங்களாக சிறிய காயம் என கருதாமல் உடனே மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம்.

கணுக்கால் சுளுக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டால், காலை உதறுவது தவறு. சிலர் உடனே காலை நன்கு உதற கூறுவார்கள். அவ்வாறு செய்ய வேண்டாம். இது, தசை பிசைவு ஏற்படவும், வலி அதிகமாகவும் காரணமாகிவிடும். 

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில ஐஸ் வையுங்கள் இது, வீக்கம் பெரிதாகாமல் தடுக்கும். சரியான மருத்துவரை அணுகி வைத்தியம் செய்வது தான் சுளுக்கை சரிசெய்ய தகுந்த முறையாகும்.

மூக்கில் இரத்தம் வழிதல் மூக்கில் இரத்தம் வழியும் போது, உடனே பின்னோக்கி படுக்க கூறுவார்கள் இது இரத்தம் வழிதலை குறைக்கும் என கூறுவார்கள், ஆனால் இவ்வாறு செய்ய கூடாது.

நேராக அமர்ந்து தலையை மட்டும் மேல்நோக்கி நிமிர்த்தி வைக்க வேண்டும். இலகுவாக இரத்தம் வழியும் மூக்கின் பக்கம் அழுத்தம் தாருங்கள். 10-15 நிமிடத்திற்குள் இரத்தம் நின்றுவிடும். அப்படி இல்லை என்றால், மருத்துவமனைக்கு உடனே கூட்டி செல்லுங்கள்.

விஷம் விஷம் அருந்தினாலோ அல்லது தெரியாமல் உண்டுவிட்டதாக நினைத்தாலோ உடனே வாந்தி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் எந்த பயனும் ஏற்பாடு போவதில்லை. எனவே, உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது தான் உடனடி தீர்வு தரும்.

வலிப்பு வலிப்பு ஏற்படும் போது, நன்கு காற்று வரும் படி நோயாளிக்கு இடம் விட வேண்டும். அவர்களது வாயில் உணவோ, நீரோ ஏதும் ஊட்ட வேண்டாம். வலிப்பு அதிகமாவது போல் இருந்தால் உடனடியாக மருத்தவமனைக்கு கூட்டி செல்ல வேண்டியது அவசியம். காக்கா வலிப்பாக இருந்தால் இரும்பு பொருளை கையில் கொடுத்து அழுத்தமாக பிடிக்கும் படி செய்யலாம்.


ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்!

By     No comments:

பெரும்பாலான இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் அலுமினிய பாத்திரங்கள். இந்த பாத்திரங்களைத் தான் பலரும் தங்களின் வீடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா?

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!! ஆம், அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால், சமைக்கும் உணவில் அலுமினியம் கலந்துவிடுகிறது. பின் அவற்றை உட்கொள்ளும் போது, அவை இரத்த நாளங்கள் வழியே சில உறுப்புக்களில் தங்கி, ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு காரணம், அதில் உள்ள அயனிகள் அல்லது மின்துகள்கள் தான்.

இந்த அயனிகள் மூளைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். தொடர்ச்சியாக அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!! அதுமட்டுமின்றி, அலுமினியம் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கும். சரி, இப்போது அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

நரம்பு மண்டலம் அலுமினிய பாத்திரங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதற்கு அதில் உள்ள மின்துகள்கள் தான் காரணம். இதனால் தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.

ஞாபக மறதி அலுமினிய பாத்திரங்கள் மனித மூளையைத் தான் தாக்கும். அதிலும் தொடர்ந்து அலுமினிய பாத்திரங்களைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்தால், அதனால் மூளை நோய்கள் மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.

அதிகப்படியான சோர்வு தொடர்ச்சியான அலுமினிய பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் திடீரென்று அதிகப்படியான சோர்வை சந்திக்கக்கூடும். சோர்விற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை சோதனையை மேற்கொண்டால், அதற்கு காரணமாக இருப்பது அலுமினிய பாத்திரங்களாகத் தான் இருக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் அலுமினியம் எலும்பின் வளர்ச்சியைத் தடுத்து, அதில் அதிகப்படியான தேய்வை ஏற்படுத்தி, அதிகமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும்.

சிறுநீரகங்கள் அலுமினியம் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பெருங்குடல் பாதிக்கப்படுவதோடு, அதனைத் தொடர்ந்துசிறுநீரகங்களும், இரத்தமும் பாதிக்கப்படும்.

புற்றுநோய் அலுமினியம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று எவ்வித ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எப்படி பெருங்குடல் பாதிக்கப்படுமோ, அதேப்போல் அதிகப்படியான பாதிப்பின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.

எதற்கு இந்த வீண் வம்பு, எது ஆரோக்கியமான சமையல் பாத்திரம் என்று தெரிந்து அவற்றைப் பயன்படுத்தி வாருங்களேன்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேண்டுமெனில் அலுமினிய பாத்திரங்களுக்கு சிறந்த மாற்றாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தலாம். அலுமினிய பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களால் ஏற்படும் பாதிப்பு குறைவே.

மண் பாத்திரங்கள் இருப்பதிலேயே எவ்வித பக்கவிளையும் இல்லாத ஒரு வகையான பாத்திரம் தான் மண் பாத்திரங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, சமைக்கும் போது உணவின் சுவையும் அதிகரிக்கும்.


Wednesday, 16 September 2015

உணவு உட்கொண்டதும் ஏன் தூங்கக்கூடாது என்று தெரியுமா?

By     No comments:

பலருக்கு உணவை உட்கொண்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கும். என்ன தான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும், பகல் நேரத்தில் உணவை உட்கொண்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்கு முன் சாப்பிடுவதாலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் பலரும் அறிந்த ஒன்று உடல் பருமன் அதிகரித்துவிடும் என்பது.

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்!!! ஆம், உண்மையிலேயே உணவு உண்டதும் தூங்கினால், உடல் பருமன் அதிகரித்துவிடும். ஆனால் உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்று, உணவை உட்கொண்ட உடனேயே தூங்கினால் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!! சரி, இப்போது உணவு உண்டதுவும் ஏன் தூங்கக்கூடாது என்பதற்கான காரணங்களும், அப்படி தூங்கினால் என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்றும் பார்ப்போமா!!!

உடல் பருமன் உணவை உட்கொண்ட உடனேயே தூங்குவதால் உடல் பருமன் அதிகரிப்பதற்கு காரணம், மற்ற நேரங்களில் எடுக்கும் கலோரிகளை விட, தூங்கும் முன் கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்வதால், அவை உடல் பருமனை விரைவில் அதிகரித்துவிடும்.

நெஞ்செரிச்சல் உணவு உண்ட உடனேயே தூங்கினால், நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும். உணவு உண்ட பின் தூங்கும் போது, உணவுக்குழாய் வழியாக இரைப்பில் உள்ள அமிலமானது மேலே ஏறி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கினால், இரைப்பை உணவுக்குழாய்க்குரிய எதிர்வினை அறிகுறிகளான இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுவது அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உணவை உட்கொண்ட உடனேயே தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பக்கவாதம் ஆய்வு ஒன்றில் உணவை உட்கொண்டதும் தூங்க சென்றால், பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் ஏற்கனவே பக்கவாதம் வந்த 250 பேரையும், 250 பேர் தீவிர இதய குழவிய நோயினைக் கொண்டவர்களையும் கொண்டு சோதிக்கப்பட்டது. 

இதில் உணவு உண்டதற்கும், தூங்குவதற்கும் இடையே நிறைய இடைவெளி விட்டவர்களுக்கு பக்கவாத தாக்கத்தின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தூக்கமின்மை குறிப்பாக இரவில் சாப்பிட்டவுடன் தூங்க சென்றால், தூக்கமின்மைக்கு ஆளாகக் கூடும். அதிலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. 

அதேப்போல் இரவில் சாப்பிடாமல் தூங்கினாலும், தூக்கமின்மை ஏற்படும். எனவே இரவில் தூங்க செல்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும்.


தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By     No comments:

கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான். ஆனால் அதில் ஒரு வேறுபாடு உள்ளது.

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! அது என்னவெனில் ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.

இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! எனவே கேரட் சாப்பிடுவதற்கு பதிலாக, கேரட்டை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இப்போது தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பார்வை மேம்படும் தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும்.

இரத்த சர்க்கரை அளவு சீராகும் கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.

புற்றுநோய் தடுக்கப்படும் கேரட் ஜூஸில் கரோட்டீனாய்டு வளமாக நிறைந்துள்ளது. கரோட்டீனாய்டு நிறைந்த உணவுப் பொருளை அதிகம் எடுத்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வருவது நல்ல வழியாகும்.

உலர்ந்த சருமத்திற்கு நல்லது வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது.

கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.

செரிமானம் மேம்படும் உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

நுரையீரல் ஆரோக்கியம் கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளதால், அதனை ஜூஸ் போட்டு தினமும் குடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சிகரெட் பிடித்தோ அல்லது சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தோ நுரையீரலில் படிந்த நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

புதிய தாய்மார்களுக்கு நல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.


ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு?

By     No comments:

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது.

அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும்.

அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதம் இருப்பது நல்லது.

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் – இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை.

உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம்.

நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

Tuesday, 15 September 2015

உட்கார்ந்த இடத்தில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கான எளிய வழிகள்!!!

By     No comments:

மன அழுத்தம், நமது உடல்நலத்தையும், மன நலத்தையும் வலுவாக பாதிக்கும் முதல் கருவி. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தம் என்ற வார்த்தையே நிறைய பேருக்கு தெரியாது. ஆனால், இன்றைய நிலையோ, பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் கூட மனம் அழுத்தமாக உணர்வதாக கூறுகின்றனர்.

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!! இதற்கு முற்றிலும் காரணமாக இருப்பது நமது வாழ்வியல் மாற்றங்கள் தான்.

சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க திணறும் நமது மனப்பாங்கு. அகலக்கால் எடுத்து வைக்கும் முயற்சிகள், எதிர்காலத்தை பற்றிய திட்டமிடுதலில் குறைபாடு, மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்று அதிக கவனமாக இருப்பது அல்லது கவனக் குறைவாக இருப்பது.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!! இதுப் போன்ற காரணங்களே மன அழுத்தம் இன்று பூதாகரமாக காட்சியளிக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து எப்படி வெளிவருவது? உட்கார்ந்த இடத்தில இருந்தே உங்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரலாம்,இதை எல்லாம் நீங்கள் செய்து வந்தால்....

கனவுக் காணுங்கள் ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்தவாறு கனவு காண்பது தவறு என்று உங்களது ஆசிரியர் திட்டியிருக்கலாம். ஆனால், இப்போது நீங்கள் தாராளமாக கனவுக் காணலாம்.

ஃபேண்டஸி திரைப்படங்களில் வருவது போன்ற காட்சிகள், ஓர் ரம்மியமான காதல் கதை, சிங்கங்களே கண்டு அஞ்சிநடுங்கும் ராஜாவாக நீங்கள் இருப்பது போல, எப்படி வேண்டுமானாலும் கற்பனை உலகில் சுற்றி வாருங்கள். உங்கள் மன அழுத்தம் முற்றிலுமாக குறைந்துவிடும். ஒரே எண்ணத்தில் அடைப்பட்டு இருப்பதால் கூட மன அழுத்தம் நீடிக்கலாம்.

மெக்கானிக் ஆகிவிடுங்கள் மன அழுத்தமாக இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் வீட்டிலேயே சின்ன மெக்கானிக்காக உருவெடுத்து விடுங்கள். நகம் வெட்டும் கருவி, கத்திரிக்கோல், ரேடியோ போன்ற சிறு சிறு உபகரணங்களை கழட்டி மாட்டுவது, அல்லது துடைத்து வைப்பது என ஏதுனும் புதிய வேலைகளில் உங்களை ஈடுபடுத்துங்கள் மன அழுத்தம் விரைவாக குறைந்துவிடும்.

கவிஞராக இல்லாவிட்டாலும் கூட.. கவிஞர்கள் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் தோன்றுவதை எழுதுங்கள். தினமும் டைரி எழுதுவது கூட மன அழுத்தம் குறைய உதவியாக இருக்கும்.

ஆக மொத்தம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதில் இருந்து வெளிவந்து வேறு வேலைகளில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம். சிறிது நேர மன ஓய்வு உங்களுக்கான சரியான வழியை காட்டும்.

இசைஞானியின் பாடல்கள் உட்கார்ந்த இடத்திலேயே மன அழுத்தத்தை போக்க மற்றொரு சிறந்த வழி, பாடல்கள் கேட்பது. மனது இலகுவாக உணரும் படியான பாடல்கள் கேட்க வேண்டியது அவசியம்.

டப்பாங்குத்து பாடல்களை தயவு செய்து தவிர்க்கவும். முடிந்தால் 1980-களின் இசைஞானியின் பாடல்களிடம் உங்களது காதுகளை ஒருசில மணி நேரங்கள் ஒப்படைத்துவிட்டு அமர்ந்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.

மூச்சு பயிற்சி மன அழுத்தத்தில் இருந்து வெளிவர மூச்சு பயிற்சி வெகுவாக உதவும். மூக்கின் ஒரு பக்க துவாரம் வழியாக மட்டும் 8 முறை இழுத்து மூச்சுவிட்டு, மறுபடியும் மறு துவார பக்கமாக திருப்பி செய்ய வேண்டும். இதுப் போல மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் கூட மன அழுத்தம் குறையுமாம்.

புகைப்படங்களும் நினைவுகளும் நீங்கள் கடந்து வந்த பாதையில் கண்டிப்பாக மறக்க முடியாத நினைவுகள் இருக்கும். உங்களது திருமண அல்பம், நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த போது எடுத்த போட்டோக்கள் என நிறைய நினைவுகள் உங்களுக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும் அதை நினைவு கூர்ந்து பாருங்கள். முடிந்தால் அந்த புகைப்படங்களையும் எடுத்து பாருங்கள். மன அழுத்தம் குறைய இது உதவும்.

தியான நிலை அனைத்தையும் மறந்து உங்கள் கண்களை மூடி அமைதியான இடத்தில் அமர்ந்திருங்கள். ஓம் என்று தான் கூறி தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த பெயர்கள், அது கடவுளாக இருக்கலாம், உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தை, காதலியாக கூட இருக்கலாம், அவர்களது பெயரை உச்சரித்து தியானம் செய்யுங்கள்.

சுற்றுலா நீங்கள் சென்று வந்த, உங்களுக்கு பிடித்தமான சுற்றுலா இடங்களுக்கு நீங்கள் தனியாக ஒரு முறை கற்பனையில் சென்று வாருங்கள். அன்றைய நினைவுகள், நீங்கள் பார்த்த இடங்கள், அவ்விடத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் இவை எல்லாம் உங்கள் மன அழுத்தத்தை போக்கிநிம்மதியான சூழலை தரும்.


பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!

By     No comments:

பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளாலும், முறையற்ற பராமரிப்பினாலும் பற்கள் எளிதில் சொத்தையாவதோடு, ஈறுகளும் பாதிக்கப்படும்.

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! பற்கள் சொத்தையானால் பல் வலி, சாப்பிடும் போது அல்லது எதையேனும் குடிக்கும் போது வலி, குளிர்ச்சியான அல்லது சூடான உணவுகளை உட்கொள்ள முடியாமல் இருக்கது, பற்களில் கருமையான புள்ளிகள் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்! பற்கள் சொத்தையாவதற்கு பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளான தானியங்கள், நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவைகள் தான் காரணம். அதற்காக இவற்றை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இவற்றை உட்கொண்ட பின், நீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்! மேலும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உட்கொண்டு வந்தால், அந்த உணவுகள் பற்களின் மேற்பரப்பில் உள்ள எனாமல் கரையாமல், பற்கள் சொத்தையாமலும், வலிமையோடும் இருக்க உதவும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!

கால்சியம் நிறைந்த உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பற்கள் சொத்தையாவதைத் தடுக்கலாம். ஏனெனில் பற்கள் மற்றும் தாடைகள் பெரும்பாலும் கால்சியத்தினால் உருவானதே.

கால்சியம் சத்து உடலில் குறைந்தால், ஈறு நோய்கள் மற்றும் பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், பசலைக் கீரை, கேல் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அன்றாடம் எடுத்து வருவது அவசியம்.

மக்னீசியம் நிறைந்த உணவுகள் மக்னீசியம் நிறைந்த உணவுகள் வாயில் அல்கலைனை அதிகரிப்பதோடு, கால்சியத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் டி-யை உடல் உறிஞ்ச உதவும். எனவே மக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரைகள், பாதாம், பீன்ஸ், மீன், அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை அன்றாடம் உட்கொண்டு வருவது, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இறைச்சிகள் இறைச்சிகளும் வாயில் அல்கலைன் உற்பத்தியை அதிகரித்து, மிகவும் சக்தி வாய்ந்த பைட்டிக் அமிலத்தை நீர்க்கச் செய்யும். எனவே சிக்கன், மீன், கடல் உணவுகள் போன்ற வைட்டமின் பி12 மற்றும் பி2 நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

வைட்டமின் பி12 மற்றும் பி2 குறைபாடு உள்ளவர்களுக்குத் தான் வாய்ப்புண் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். ஆகவே இறைச்சிகளை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

வைட்டமின் டி சூரியக்கதிர்களிடம் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது என்று, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள தவறாதீர்கள். ஏனெனில் உணவின் மூலமும் வைட்டமின் டி-யைப் பெற வேண்டியது அவசியம். எனவே வைட்டமின் டி அதிகம் நிறைந்த சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள், முட்டை, பால் போன்றவற்றையும் தினமும் உட்கொண்டு வாருங்கள்.

நல்ல கொழுப்புக்கள் நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 பற்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இத்தகைய ஒமேகா-3 சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, வால்நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றும். அதற்கு உணவில் தேங்காய் எண்ணெயை சேர்க்கலாம் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு பற்களை துலக்கலாம்.

வெண்ணெய் வெண்ணெயில் கால்சியம் வளமாக உள்ளது. பலரும் கொழுப்பு நீக்கப்பட்ட வெண்ணெயைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் கொழுப்புமிக்க வெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்ற தவறான எண்ணம் இருப்பதாலேயே. 

எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவாக உட்கொண்டு வந்தால், அது ஆரோக்கியமானதே. எனவே கொழுப்புமிக்க வெண்ணெயை அளவாக உட்கொண்டு, அதன் முழு நன்மையையும் பெறுங்கள்.

காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொண்டு வந்தால், எச்சிலின் அளவு சீராக இருப்பதோடு, பற்சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும் கனிம பாதுகாப்புக்களை உற்பத்தி செய்து, பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் கேரட், முள்ளங்கி போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது.

உப்பு பற்களை துலக்கும் போது தினமும் சிறிது உப்பை டூத் பேஸ்ட் மீது தூவி பற்களை துலக்கி வந்தால், அவை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்களை வெண்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளலாம்.

பேக்கிங் சோடா வேண்டுமெனில் பேக்கிங் சோடாவை நேரடியாகவோ அல்லது டூத் பேஸ்ட்டுடனோ சேர்த்து பற்களை துலக்கலாம். இதனாலும் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதோடு, வாயில் அல்கலைன் அளவை சீராக பராமரித்து, பற்சொத்தை ஏற்படுவதைத் தடுக்கலாம்.