Thursday 17 September 2015

பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிர் பிழைதத பெண்மணி (வீடியோ)

By     No comments:



தமிழக அரசின் ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சுவாதி (30). தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காயான்குளத்தில் வசித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரைப் பார்க்க சுவாதி ராஜபாளையம் வந்தார். பின்பு, அங்கிருந்து கொல்லம் புறப்பட்டார். இதற்காக, அவர் ராஜபாளைத்தில் இருந்து தென்காசிக்கு சென்றார். தென்காசியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் சுவாதி பயணம் செய்தார்.

அந்தப் பேருந்து, கேரளா மாநிலம் புனலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கொட்டாரக்கரை நோக்கி புறப்பட்டது. அப்போது, அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக சுவாதி கீழே விழுந்தார். இதனால், அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.


இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொது மக்கள் அவரை காப்பாற்றி, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :