Tuesday 15 September 2015

கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்பட்ட 4 இளைஞர்கள் கைது

By     No comments:


கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 4 இளைஞர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

அபுதாபியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் நான்கு இளைஞர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விமானநிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் படியாக வந்த நான்கு இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.


அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததை தொடர்ந்து அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 4 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :