Wednesday 16 September 2015

அழகிரி கூறப்போகும் நல்ல செய்தி என்ன?- திமுக வினர் கலக்கம்

By     No comments:



அடுத்த 2 மாதத்தில் நல்ல செய்தி ஒன்றை நான் தெரிவிக்க உள்ளேன் அதுவரை நீங்கள் பொறுத்து இருங்கள் ' என்று மு.க அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திமுகவின் தலைவர் கருணாநிதி - தயாளுவின் திருமண நாள் அன்று தனது தாய் தந்தையிடம் மு.க அழகிரி ஆசி பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் தனது அம்மாவிடம் ஆசி பெறுவதற்கு மதியம், 3:00 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வந்த அழகிரி, மாலையில் கோபாலபுரம் சென்று தாய் தயாளுவை மட்டும் சந்தித்து, உடல் நலம் விசாரித்ததோடு, திருமண நாளை முன்னிட்டு ஆசியும் பெற்றார்.

இதற்கு முன்னதாக மு.க.அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் வந்த கருத்துகணிப்பு குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு திமுக விடமிருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த 2 மாதத்தில் நல்ல செய்தி ஒன்றை நான் தெரிவிக்க உள்ளேன் அதுவரை நீங்கள் பொறுத்து இருங்கள் ' என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அவர் சொல்லப் போகும் நல்ல செய்தி என்ன என்பது புரியாமல் திமுக முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

அவரது ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாரா அல்லது திமுகவிலேயே இணைய உள்ளாரா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :