Wednesday 16 September 2015

மெக்கா விபத்து: மகிழ்ச்சி தெரிவித்த பாஜக நிர்வாகி கைது

By     No comments:



மெக்காவில் நடைபெற்ற விபத்தில் பலியானவர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பாஜக நிர்வாகியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, முஸ்லீம் மக்களின் புனித இடமான மெக்காவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட விபத்தில் 100 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்திற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், ஃபேஸ்புக்கில், தமிழக பாஜக தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகியான, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் பதிவு செய்து இருந்தார்.

இந்த தகவலை கண்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மூலம் ஆவேம் அடைந்தனர். மேலும், இந்த தகவலை திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவித்தனர். இது குறித்து, திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில், வேல்முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்தனர். சர்ச்சைக்குறிய அந்த கருத்து, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :