Monday 14 September 2015

யானையிடம் இருந்து நூலிலையில் உயிர் தப்பிய இளைஞர் : வீடியோ இணைப்பு

By     No comments:



மேற்குவங்கத்தில் யானையின் பிடியில் இருந்து இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தில் குருமாரா வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை யானை ஒன்று சாலையை இடைமறித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்காமல் சாலையின் ஓரமாக நிறுத்தி யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்குவந்த இருவர், யானையை வேகமாக கடந்து செல்ல முயற்சித்தனர்.

அசுர வேகத்தில் சென்ற அந்த இருவரையும் யானை தடுத்து நிறுத்தியது. இதனால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஒருவர் தப்பிக்க மற்றொருவர் மோட்டார் சைக்கிளின் அடியில் அகப்பட்டுக் கொண்டார்.

யானை முதலில் மோட்டார் சைக்கிளை தாக்க இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் நூலிலையில் யானையின் பிடியில் இருந்து தப்பித்தார். விறுவிறுப்பு நிறைந்த இந்த வீடியோ இணையதளத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.


busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :