மும்பையில், உடல் உறவுக்கு ஒத்துழைக்காததால், அவரின் கணவர் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.
மும்பையச் சேர்ந்த 30 வயது மிக்க ஒருவர், தன் மனைவி, அவளின் மானசீக குருவின் பேச்சைக் கேட்டு, தன்னுடன் உடல் உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். முதலிரவின் போதே என்னை ஆணுறைப் பயன்படுத்த வற்புறுத்தினார்.
மேலும், திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் செக்ஸிற்கு மறுத்த அவரின் மனைவி, 5 வருடங்கள் தனக்கு குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லாத காரணத்தால் தனக்கு செக்ஸில் ஈடுபட விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். எனவே எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால் அவர் மனைவியோ, தன் கணவர் இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்துவதாக தெரிவித்தார். மனைவியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம்,அவர் கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மறுப்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று கூறி கணவனுக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது.