Monday 14 September 2015

டி.வி லைவ் ஷோவில் அடித்துக் கொண்ட சாமியார்கள் : டில்லியில் பரபரப்பு

By     No comments:



சர்ச்சை சாமியார் ராதே மா பற்றிய பேச்சால்,டிவி நேரடி நிகழ்ச்சியில் ஆண் சாமியார் ஒருவரும், பெண் ஒருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சாமியாரான ராதே மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வரதட்சணை வழக்கு உட்பட இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎன் 7 என்ற தொலைக்காட்சியி ஆஜ் கா முத்தா என்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ஓம்ஜி என்ற ஆண் சாமியார், ராக்கி பாய் என்ற பெண் ஜோசியர் மற்றும் தீபா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரசாரமாக நடைபெற்ற விவாத்தில், சர்ச்சை சாமியார் ராதே மா பற்றி பேச்சு எழுந்தது. அப்போது பேசிய ராக்கிபாய், ராதே மா பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதைக்கேட்டு கோபமடைந்த ஓம்ஜி “ நீங்கள் எப்படி ராதே மா பற்றி இப்படி பேசலாம். முதலில் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்” எனக் கூறினார். அத்துடன், சில வழக்குகள் குறித்துப் பேசினார்.

ஆத்திரமடைந்த ராக்கிபாய் ஓம்ஜி யிடம் கடுமையாக் வாதிட்டார். அதற்கு ஓம்ஜி நான் உங்களைப் பற்றி பேசவில்லை. தீபா சர்மா என்பவரைப் பற்றிப் பேசினேன் என்றார். இதனால் கோபமடைந்த தீபா சர்மா, எழுந்து ஓம்ஜி யிடம் வந்து அவரது முதுகைத் தட்டி அமைதியாக இருங்கள். இப்படிப் பேசாதீர்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஒம்ஜி விடாமல் அவரைப் பற்றி பேசவே, “பளார்” என ஓம்ஜி யின் கன்னத்தில் அறைந்தார்.

இதனால் கொதிப்படைந்த்த ஒம்ஜியும் அவரை அடித்தார். இருவரும் கடுமையாக வாதித்துக்கொண்டனர். தொலைக்காட்சியில் இந்த சண்டையை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :