கையில் சூலாயுதம், லிப்ஸ்டிக், ஜிகு ஜிகு உடைகள் அணிந்து கொண்டு ஆசிர்வாதம் செய்வது... அரை குறை ஆடைகளுடன் பேஸ்புக்கில் போஸ் கொடுப்பது என கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பெண் சாமியார் ராதே மா.
இவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை பொலிஸ். மேலும் பிரபல டி.வி. நடிகை டோலி பிந்த்ரா அளித்த புகாரையடுத்து, அவர் மீது மும்பை பொலிசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் நள்ளிரவில் நிர்வாண பூஜை நடத்தியதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் டிவி நடிகை அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இப்படி சர்ச்சைகளின் நாயகியாக திகழ்ந்து வரும், ராதேமா குறித்து, ‘ராதே மாவும் சர்ச்சைகளும்’ என்ற தலைப்பில் இன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேரலை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களில் ஓம்ஜி மகராஜ் என்ற சாமியாருக்கும் பெண் ஜோதிடரான தீபா ஷர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி விடவே ஓம்ஜியின் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாத தீபா, தனது இருக்கையிலிருந்து எழுந்து சாமியாரின் அருகே சென்று அவரது தோளை தட்டி அவரை பளாரென்று அறைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாமியாரும் அவரை திரும்ப தாக்கினார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தி வருகிறது.